இந்திய அரசின் சட்ட விதிகளை எதிர்த்து வாட்ஸ் அப் வழக்கு!'
அரசு அறிவித்த புதிய சட்ட விதிகளின்படி, பயனாளர்களின் தரவுகளை கண்காணித்து, சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களை பரப்புவோரின் விவரங்களை உடனடியாக அரசுக்கு தெரிவிக்குமாறும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டது. இதற்காக ஓவ்வொரு நிறுவனமும் சமூக வலைத்தள குறைதீர்ப்பு அதிகாரி, தொடர்பு அதிகாரி, புகார்களை கவனித்து தீர்வு காணும் அதிகாரி, ஆதாரமற்ற, பொய்யான கருத்துகளை கண்காணித்து அதை நீக்குவதற்கான அதிகாரி என அதிகாரிகளை நியமித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த சட்ட விதிகளுக்கு உடன்பட்டாலும் எங்களுக்கு அதில் சில நிபந்தனைகள் இருப்பதால் அரசுடன் இணைந்து ஆலோசிக்கவும், அரசு அறிவித்த பொறுப்புகளுக்கு அதிகாரிகளை நியமிப்பதற்கும் ஆறு மாத காலம் கால அவகாசம் வேண்டும் என்று சில நிறுவனங்கள் கோரிக்கை வைத்தன. ஆனால், நிறுவனங்கள் கேட்...